Type Here to Get Search Results !

Kanavai Vilangum - கணவாய் விளங்கும் | Giftson Durai

நீங்கா நினைவுகளை மனதில்

நான் வைத்திருப்பேன்

காலம் மறைந்தாலும் இதை நான்

என்னில் தைத்திருப்பேன்


வாழ்க்கை துவங்கி

கையில் ஒன்றும் இல்லாமல்

கண்கள் கலங்கின நினைவுள்ளதே

நினைப்போர் அணைப்போர்

என்ற யாரும் இல்லாமல்

ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே


மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்

கதறி வாழ்க்கை போதும் என்றேன்

எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்

இதுவா வாழ்க்கை போதும் என்றேன்


உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்

மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்

மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்

இதுவே போதும் என்பேன்


கடினம் தோன்றும் சில நிமிடங்களில்

உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்

நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில்

உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்


மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே

நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே

மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே

நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே

என் வாழ்வினில் இது மட்டுமா ?


கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்

நினைவாகும் ஓர் நாள் வருமே

அந்நாள் எனக்காய் நீர் தரும் அணைப்பும்

உலகம் கண்டு வியந்திடுமே


உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்

மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்

மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்

இதுவே போதும் என்பேன்




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.